1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில்

சேவையில் இணைந்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இவர்களில் சுமார் 70% பணியாளர்கள் திறமையற்றவர்கள் என அவர் தெரிவித்தார்.

பல பிரிவுகளில் பணி வெற்றிடம் காணப்படுவதாகவும் , சில பிரிவுகளில் பணியாளர்கள் உபரியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் எண்ணமும் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.  

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி