1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பரீட்சை

திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை தோற்றும் பரீட்சார்த்திகளின் வருகைப் பதிவேடு குறித்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதுவரை வருகைப் பதிவேடு கிடைக்கப்பெறாத பாடசாலைகளின் அதிபர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று பதிவேட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி