பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் பேரில் இலங்கை இராணுவத்தின் 314 அதிகாரிகள் மற்றும் இதர நிலைகளில் உள்ள 1,565 பேரும்
தர முயர்த்தப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் 74 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த குழு அடுத்த தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதன்படி மேஜர் ஜெனரல் தரத்திற்கு 07 பிரிகேடியர்களும். பிரிகேடியர் தரத்திற்கு 12 கேணல்களும், கேணல் நிலைக்கு 37 லெப்டினன்ட் கேணல்களும், 41 மேஜர்கள் லெப்டினன்ட் கேணல் தரத்திற்கும் உயர்தப்பட்டுள்ளனர்.