ஆப்கானிஸ்தானில் சில நாட்களுக்குள் மூன்றாவது நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
இது மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஏற்பட்டிருந்த இரண்டு நிலநடுக்கங்களில் 1,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள நிலையில், அவற்றில் குழந்தைகள் மற்றும் பெண்களுமே அதிகளவில் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.