இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக
மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
"ஆண்டுக்கு 2 முறை மட்டுமே மின்சார சபையில் திருத்தங்களைச் செய்ய முடியும் என்ற தவறான கருத்து சமூகத்தில் உள்ளது. அது வழக்கமான அடிப்படையில் செய்யப்படுவதில்லை. முதல் தடவை அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படும் போது, அவசர சூழ்நிலைகளில் கோரிக்கைகளை முன்வைக்க மின்சார சபைக்கு முடியும். அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. குறித்த நடைமுறையை பயன்படுத்தியே இதனை நாம் செய்துள்ளோம்''. என குறிப்பிட்டார்.