கொழும்பு - புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றில் இன்று (27) காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 17 பேர்
காயமடைந்துள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களில் 6 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 9.30 மணி அளவில் இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள ஜவுளி விற்பனை செய்து கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது.
கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளதுடன், பல கடைகள் தீயில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, இது குறித்து புறக்கோட்டை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.