இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் செயற்பாடுகள், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்டவை தொடர்பில் விளையாட்டுத்துறை
அமைச்சர் ரொஷான் ரணசிங்க முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாடானது நேற்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அமைச்சர் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து பல ஆவணங்களுடன் முறைப்பாட்டைக் கையளித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு சமர்ப்பித்து விட்டு வெளியேறிய போது, கிரிக்கெட் தொடர்பிலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை குறித்தும் முறைப்பாடு செய்ய வந்ததாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவிற்கு விதிக்கப்பட்ட 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்ட தடை உத்தரவை இரத்து செய்யுமாறு தெரிவித்து, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்த இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானியை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 07ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமையவே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையிலேயே அமைச்சர் ரொஷான் ரணசிங்க அந்த தடை உத்தரவை நீக்கக்கோரி இன்று மேன்முறையீடு செய்துள்ளார்.