வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்டெடுக்கும் கடினமான பணியை இவ்வருட வரவு செலவுத் திட்டம்
முன்வைத்துள்ளதாக வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றி முக்கியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த வரவு செலவுத் திட்டம் சர்வதேசப் போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார முறைமைக்கு அடித்தளமிடும் வரவு செலவுத் திட்டம் என்பதுடன் வலுவான எதிர்காலத்திற்கான முன்னோடியாகவும் அமைந்துள்ளது என்றார்.
ஜனாதிபதியின் முழு பட்ஜெட் உரை இங்கே...