1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவால்

அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.

அதேவேளை, ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவும் 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்படி தகவல்களை வெளியிட்டார்.

அரச ஊழியர்களுக்கு...

இந்த வரவு - செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான 10ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிப்பு மாத்திரமே கவர்ச்சிகரமான அறிவிப்பாக இருந்தது.

அதற்கு அப்பால் மக்கள் நலன் கருதி பல்வேறு முன்மொழிவுகள் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டன.

அவை வருமாறு:-

யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். அதற்கான பணிகளுக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்கள் உள்ளன. அவற்றில் மக்களை மீள்குடியேற்ற இதற்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு கடற்றொழிலாளர்களின் கடற்றொழிலை அபிவிருத்தி செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாகத் திட்டம் ஒன்றை mறிமுகப்படுத்த அரசு எதிர்பார்த்துள்ளது.

13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பல்கலைக்கழகங்கள் அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம் உயர்தரம் பயிலும் அனைவருக்கும் பல்கலைக்கழக கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

4 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

உள்ளூர், வெளிநாட்டு மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர இது சிறந்த வழியாகவும் அமையும். ஊனமுற்ற நபர்கள், நோயாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நன்மைத் திட்டங்களுக்கு 205 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் 30 பில்லியன் ரூபா கடன் வசதி.

நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் 'சுரக்ஷா' மாணவர் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

2024ஆம் ஆண்டில் கொழும்பில் சுமார் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு வீட்டு உரிமை வழங்கப்படும். குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் நகர்ப்புற வீடுகளுக்கு வாடகை பெறுவது நிறுத்தப்படும். அந்த வீடுகளின் உரிமை குடியிருப்போருக்கு வழங்கப்படும்.

முதியோர் கொடுப்பனவு 1000 ரூபாவில் இருந்து 3,000 ரூபாவாக அதிகரிக்கப்படும். கர்ப்பிணிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 10 ஆயிரம் வரை அதிகரிப்பு.

பெருந்தோட்ட மக்களுக்கு முழுமை யான காணி உரிமை. அதற்காக 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

பட்ஜெட் 2024: 10 முக்கிய திட்டங்கள்...

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல யோசனைகளை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.

அரசாங்கத்தின் கடன் வரம்பை உயர்த்தியமையும் இவ்வருட வரவுசெலவுத் திட்டத்தில் பிரதானமாக இடம்பெற்றுள்ளது.

10 முக்கிய பட்ஜெட் முன்மொழிவுகள்...

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி