மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை, கோப் எனப்படும் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான குழுவின் கூட்டம்
இடைநிறுத்தப்படுவதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
மேற்படி குழுவின் கூட்டம் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, சபாநாயகர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்ட பின்னர் அந்தக் குழுவின் கூட்டம் ஆரம்பிக்கப்படும் என்றார்.