ஜனாதிபதித் தேர்தலோ அல்லது பொதுத் தேர்தலோ எது நடந்தாலும் நாம் வெற்றியடைவோம் என்று, முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், எந்தத் தேர்தலுக்கு முகங்கொடுக்கவும் தாங்கள் முழுமையாகத் தயாராகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தான தர்ம வேலைத்திட்டமொன்று, கம்பஹா மாவட்டச் செயலகத்தில் இன்று (17) இடம்பெற்றது.
இதன்போது, 420 கர்ப்பிணிகளுக்கு பகல் உணவும் அவர்களுக்குத் தேவையான உபகரணங்களும், 5,000 ரூபாய் பணமும், முன்னாள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கள உள்ளிட்ட மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.