தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மின்
பிறப்பாக்கியைச் செயலிழக்கச் செய்வதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, மின் உற்பத்தியை நிறுத்த வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் தற்போது செயலிழந்துள்ளன.
மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி பராமரிப்பு பணிக்காக ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
எனினும், மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் இல்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.
பராமரிப்பு காலத்தில், அதிகபட்சமாக நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்து, தொடர்ந்து மின்சாரம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.