2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்குச் சலுகை கள் உண்டு என்று ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“கட்சி என்ற ரீதியில் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா, இல்லையா? என்ற முடிவை எதிர்வரும் தினங்களுக்குள் கூடி முடிவெடுக்கவுள்ளோம்.
“மக்களுக்கு நிவாரணம் வழங்க வரியைக் குறைத்தாலும் எம்மைப் பிழை என்கின்றனர். அதிகரித்தாலும் பிழை என்கின்றனர். ஆனால், எதிர்காலத்தில் எந்தவொரு வரியையும் குறைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என்றார்.