1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ஐசிசி) இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டால், விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்படும் என கூறப்படுகின்றது.

அத்துடன், அடுத்த வருடம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பிலும் இங்கு கலந்துரையாடல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவும் பார்வையாளர் மட்ட பிரதிநிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி