1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்றத்தில் நேற்று முறைகேடாக நடந்துகொண்டார் என்ற குற்றத்துக்காக, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த

இரண்டு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 146இன் பிரகாரம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அது இன்று (22) முதல் அமுலுக்கு வரும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

அத்துடன், சபையில் நேற்று (21) இடம்பெற்ற ஒழுங்கீனச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவினால் நாடாளுமன்றில் நேற்று உரையாற்றப்பட்டது.

இதன்போது குறுக்கிட்ட சனத் நிஷாந்த உள்ளிட்ட ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரை பேசவிடாமல் இடையூறு விளைவித்திருந்தனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நாடாளுமன்றத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட காரணத்தால் இன்று முதல் 2 வார காலத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்துவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி