விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கையின்படி, நீதிமன்றத்தில் கிரிக்கெட் அமைப்பு தாக்கல் செய்யவிருந்த
வழக்கில் ஆஜராக வேண்டுமென்று, சட்டமா அதிபருக்கு தான் அறிவித்திருந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றும் போது இந்தத் தகவலை வழங்கிய ஜனாதிபதி, எவ்வாறாயினும்.. மறுநாள் வழக்குக்காக நீதிமன்றத்திற்குச் செல்லும்போது மணி மு.ப 10.30 ஆகியிருந்ததாகவும் அதற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அமைச்சரிடம் தான் விளக்கம் கோரவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அவர்கள் சரியான நேரத்துக்கு நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தால்கூட, இவ்வாறானதொரு சூழ்நிலையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பையே வழங்கியிருக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.