ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை கிரிக்கெட்
தொடர்பான கோப் குழு விசாரணைகளில் இருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குழுவின் மற்றுமொரு உறுப்பினர் தலைமையில் கிரிக்கெட் நிறுவனம் மீதான விசாரணைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ரஞ்சித் பண்டார மற்றும் குழுவின் ஏனைய உறுப்பினர் களுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று கட்சித் தலைவர்களுக்குச் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளிடம் அண்மையில் கோப் குழு நடத்திய விசாரணைகளின் போதே கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன், குறித்த விசாரணை அறையில் இருந்தமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதன் காரணமாக ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுப்பெற்றதுடன், அவரிடம் இருந்து கோப் தலைமை பதவி பறிக்கப்பட வேண்டும் எனவும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.