ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி
வழங்கியுள்ளது.
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் சினோபெக் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நிறுவும் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்படிருந்தது.