‘அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என உறுதியாகக் கூறுகின்றேன்” என்று, இவ்வாறு தேசிய
சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஏதேனும் சர்வதேச அமைப்பொன்றில் முக்கிய பதவியொன்றைப் பெற்று ஓய்வுகாலத்தைக் கழிக்கவே ரணில் விக்கிரமசிங்க முற்படுவார். அவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார்.
“கோட்டாபய ராஜபக்ஷ என்னையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சரவை யில் இருந்து நீக்கினார். அப்போது கோட்டா ஆட்சியின் இறுதிக் காலம் ஆரம்பமானது. ரணில் விக்கிரமசிங்க, ரொஷான் ரணசிங்கவை அமைச்சரவை யில் இருந்து நீக்கியுள்ளார். எனவே, இந்த அரசின் இறுதிப் பயணமும் ஆரம்பமாகியுள்ளது” என்றார்.