1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு தீப்பந்தம் ஏற்றி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. தேசிய மனித உரிமைகள் தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அனுராதபுரம் மாவட்டத்தில் ஜனவரி மாதம் தொடக்கம் இது வரைக்கும் 200 பேருக்கு எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதுடன் அதனால் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அனுராதபுரம் மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தேஜன சோமதிலக தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மாலை முதல் நேற்று 10ம் திகதி 15 வது நாளாகவும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்து வருவதனால், இப்பிரதேசங்கள் எங்கும் சனநடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இலங்கை அமைச்சரவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர், ஊழல், மோசடி அல்லது கொலை குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளவர்கள் என சர்வதேச அளவிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

அடுத்த வருடம் முதல் முதலாம் தரத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 35ஆக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள கல்விச் செயலாளரே, வரம்பிற்கு அப்பாற்பட்டு பிரபலமான பாடசாலைகளில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மஹர சிறைச்சாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 கைதிகளின் உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி நீதிமன்ற உத்தரவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

ரத்கம கடுதம்பே பொல்கஸ்துவ பகுதி விஹாரை ஒன்றில் மத நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த தேரர் ரத்கம ஆற்றில் உயிரிழந்த நிலையில் தேரரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன. 

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் வியாழக்கிழமை 15ஆவது நாளாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முன்மொழிவை விவசாயிகள் நிராகரித்து விட்டதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக பல்வேறு சமரச முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 

மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பாராளுமன்றில் வைத்து நீங்கள் நடிகர் ரஜினிகாந்தை போன்றவரா என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். 

பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, பெண்கள் அதிகமாக துணைவரினால் வன்முறைக்குட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி