சட்டமா அதிபரும் ஜனாதிபதி
சட்டத்தரணியுமான சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்க அரசியலமைப்பு சபையில்
வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சேவை நீடிப்புக்கு ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு தெரிவித்து வருவதாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் அரசியலமைப்பு பேரவை தீர்மானம் எடுக்க தயாராகவுள்ள நிலையில், கட்சியின் கருத்தின்படி எதிர்வரும் 18ஆம் திகதி அரசியலமைப்பு சபையின் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் செயற்படுவார்கள் என எதிர்க்கட்சி சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.