அக்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் இரண்டாம்
நிலை சிறை அதிகாரி ஒரவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவை, மொரட்டுமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து சந்தேக நபர் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சந்தேகநபர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மொரட்டுவ தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.