ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்
மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இமானுவேல் பெர்னாண்டோவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழஙகுவதற்கான "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்துக்கு 5,000 காணி உறுதிகள் வழங்கப்படவுள்ள நிலையில், அவற்றில் 442 உறுதிகள் வழங்கப்பட்டன.