ஹைலெவல் வீதியின் கொடகம
பிரதேசத்தில் இன்று (17) காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி நீர் கொண்டு செல்லும் பாரிய குழாயில் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக குழாய் உடைந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக லபுகம நீர்த்தேக்கம் கொழும்பு வரையான நீர் குழாக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த இடத்தில் இருந்த மின்கம்பமும் உடைந்து சாலையில் வீழ்ந்தது.
விபத்தில் காரில் பயணித்த சாரதி உட்பட இருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் அதிவேகமாக வந்து வீதியை விட்டு விலகி நீர்க் குழாயில் மோதி மீண்டும் தரையில் வீழ்ந்து கவிழ்ந்தது.
நீர் குழாயில் ஏற்பட்டுள்ள கடும் சேதம் காரணமாக கொழும்புக்கான நீர் விநியோகம் வழமைக்குத் திரும்ப சிறிது காலம் தாமதமாகலாம் என நீர் வழங்கல் சபையின் மஹரகம வலய அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்