தனது மகன் காணாமல் போனமை
தொடர்பில் சட்ட மா அதிபரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, சிலர் தனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து அச்சுறுத்தியதாக தாய் ஒருவரால் அஹங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நள்ளிரவில் தனது மகன் கபில குமார டி சில்வா, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கடத்தப்பட்டு 25 நாட்களாகியும் காணாமல் போயுள்ளதாக கடந்த 13ஆம் திகதி சட்டமா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கபில குமார டி சில்வாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைக் கண்டிப்பதாகக் கூறும் கைதிகள் உரிமைக் குழுவுக்கு, தாய் அஹங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது, அதே இலக்கத்திலிருந்து அழைப்பு வந்துள்ளதாகவும் ஆனால் அவர் பதிலளித்தபோது அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே, இச்சம்பவம் தொடர்பான சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அந்தக் குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.