ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை
பாராட்டுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இதுவரையில் அதிகளவு நிதி ஒதுக்கீட்டை தற்போதைய ஜனாதிபதியே வழங்கியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய ஆதரவை மிகவும் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.