கலஹா, தெல்தோட்டை
பிரதேசத்தில் தலையில் தேங்காய் வீழ்ந்ததில் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
கலஹா தெல்தோட்டை நாரன்ஹின்ன தோட்டத்தில் வசிக்கும் லோகேஸ்வரன் கியாங்ஷினி என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
தந்தை குழந்தையை பக்கத்து வீட்டுக்கு தூக்கிச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, வீட்டின் முன்புறம் முப்பது அடி உயரத்தில் காணப்பட்ட தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று குழந்தையின் தலையில் வீழ்ந்தது.
உடனடியாக குழந்தையை முச்சக்கர வண்டியில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தையிட் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த நிலையில் அது உயிரிழந்துள்ளது.