இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில்
இரண்டு ரயில்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சரக்கு ரயில் ஒன்றும் பயணிகள் ரயில் ஒன்றும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு அசாமில் உள்ள கொல்கத்தா மற்றும் சில்சாரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்த 'கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்' பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது.
தேயிலை தோட்டம் நிறைந்த மலைகள் அருகே இந்த ரயில்கள் மோதிக்கொண்டன.
சரக்கு ரயிலுடன் மோதிய பயணிகள் ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கவிழ்ந்த ரயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.