வெள்ளை வேனில் வந்த கறுப்பு
ஆடை அணிந்த சிலர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட இளைஞனின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் வெள்ளை வேனில் வந்து ஹீனடியங்கல தேவாலயத்துக்கு அருகில் இளைஞனைத் தாக்கி கடத்திச் சென்றுள்ளதாக இதுவரையான விசாரணைகளில் தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் களுத்துறை உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.