1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கோட்டே,  மாதிவெல பிரதேசத்தில்

வர்த்தகர் ஒருவரை தாக்கிக் கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் சிறிமான்ன எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சந்தேக நபரை நுகேகொட பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

நேற்று முன்தினம்  (16)  பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உட்பட  ஜீப் மற்றும் காரில் வந்த 8 பேர் கோட்டே,  மாதிவெல பிரதேசத்தில்  வைத்து  வர்த்தகர் ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் சிறிமான்ன தனது ஜீப்பில் கடத்தலுக்கு வந்துள்ளமை  சிசிரிவி காட்சிகளில்  பதிவாகியுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி