வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள்
மற்றும் இரண்டு மகசீன்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாம் தெரிவித்துள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்குமைய, ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் மேற்கொள்ளப்ட்ட விசாரணைகளின் ஹொரணையில் மறத்து வைக்கப்பட்டிருந்த ஒரு துப்பாக்கி மற்றும் மகசீன்களுடன் மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட 45 மற்றும் 55 வயதுடைய இரு சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல மற்றும் ஹொரண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.