'வளவ்வ புஞ்சிநோனா' எனக்கு எதிராக வழக்குத்
தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றதால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலி கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தான் வெளியேறாமல் தொடர்ந்திருந்தால், அடுத்த தேர்தலில் கட்சியில் யாரும் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பொருத்தமானவர்கள் எவரும் இல்லாத காரணத்தினால்தான் விஜயதாச ராஜபக்க்ஷ தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.