பேலியகொட பிரதேசத்தில் உள்ள தனியார்
நிறுவனமொன்றின் பின்புறமான களனி கங்கையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (17) மாலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.