உலகின் உயரமான வலைப்பந்து
வீராங்கனையாக கருதப்படும் இலங்கையின் தர்ஜனி சிவலிங்கம் நேற்று (17) திருமணம் செய்து கொண்டார்.
தென்னிந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர். பிரசான் என்பவரையே அவர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் சென்னை ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
கடந்த வலைப்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிக்குப் பின்னர் தர்ஜனி வலைப்பந்து மைதானத்திலிருந்து விடைபெற்றார்.
தர்ஜனி 4 வலைப்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், 5 ஆசிய வலைப்பந்துப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
2019 ஆம் ஆண்டு வலைப்பந்தாட்ட உலகக் கோப்பையில் பங்கேற்றபோது தர்ஜனிக்கு 40 வயது. வலைப்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய மிக வயதான வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
2023 ஆம் ஆண்டு வலைப்பந்தாட்ட உலகக் கோப்பையில் பங்கேற்றதன் மூலம் அவர் அதே சாதனையை முறியடித்தார்.