வவுனியா பகுதியில் நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது.
நேற்று (18) இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லேகல, மஹகனதரவ மற்றும் ஹக்மன ஆகிய நிலநடுக்க மையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.