சுகததாச விளையாட்டரங்கில்
நீச்சல் போட்டிக்கு வருகை தந்த சிறுமிகளை கையடக்கத் தொலைபேசி மூலம் நுணுக்கமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (18) உத்தரவிட்டுள்ளது.
கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஹொரணை பகுதியைச் சேர்ந்த சுபசிங்க இசுரு சம்பத் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.
நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் நீச்சல் போட்டிக்கு வருகை தந்த சிறுமிகளின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் பேரில் இலங்கை மின்சார சபையின் ஊழியரான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
கடந்த 15ஆம் திகதி சுகததாச நீச்சல் தடாகத்தில் மேல்மாகாண நீச்சல் போட்டியொன்று இடம்பெற்றதுடன், சிறுமிகள் நீச்சல் உடை அணிந்து பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததை சந்தேகநபர் தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கைத்தொலைபேசியை சோதனையிட்டபோது சிறுமிகளின் பல காணொளிகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதிவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் அறிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்