மது போதையில் முச்சக்கர வண்டியைச்
செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர், பொலிஸ் சார்ஜன்ட்டின் தலையில் கைத்தொலைபேசியால் தாக்கியதில் காயமடைந்த சார்ஜன்ட் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (18) போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்தபோது, மதவாச்சி பொலிஸார் மதவாச்சி வைத்தியசாலைக்கு முன்பாக முச்சக்கரவண்டியை தடுத்து நிறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டியின் சாரதி மதுபோதையில் இருந்தமை தெரிய வந்ததையடுத்து, சந்தேகத்தின்பேரில் அவர் கைது செய்யப்பட்டு, மூச்சுப் பரிசோதனைக்காக மதவாச்சி பொலிஸ் நிலைய வாகனப் போக்குவரத்துப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மூச்சுப் பரிசோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சந்தேக நபர், கையிலிருந்த கையடக்கத் தொலைபேசியினால் பொலிஸ் உத்தியோகத்தரின் தலையில் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.