தபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச
விலையை 100 ரூபாவாக அதிகரிப்பதற்கான அங்கீகாரம் மிக விரைவில் கிடைக்கப்பெறும் என வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெலப்பிட.ட தெரிவித்துள்ளார்.
தற்போது கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான முத்திரை ஒன்றின் குறைந்த பட்சக் கட்டணம் ஐம்பது ரூபாவாக உள்ளதாகவும் தபால் திணைக்களத்தின் நட்டத்தை குறைக்கும் வகையில் முத்திரையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் தபால் துறைக்கு 7,000 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.