கோட்டாபய ராஜபக்க்ஷவை ஜனாதிபதி பதவியில்
இருந்து நீக்கிய பின்னர் ‘ அரகல வீரர்கள் ’ எதிர்பார்க்கும் சமூக மாற்றத்துக்கு நாட்டை வழிநடத்த மக்கள் போராட்டக் கூட்டணி என்ற புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என சமூக ஆர்வலர் வசந்த முதலிகே நேற்று (19) கொழும்பில் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் அமைப்பில் மாற்றத்தைக் கோரினர் . ரணில் விக்கிராமசிங்க ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார் என்பது எமக்குத் தெரியும்.
தற்போதைய எமது அமைப்பின் மூலம் அவரை நெருக்கடியின் அடிமட்டத்துக்கு இழுக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதெ எமது நோக்காகும்
2022ஆம் ஆண்டு ரணில் விக் ராமசிங்க ஆட்சிக்கு வந்த போது நாட்டின் கடன் 84 பில்லியன் டொலர்களாக இருந்தது.
2024 கடன் 100 பில்லியன் டாலர் ஆகிவிட்டது . நெருக்கடியின் பின்னால் சிக்கிக் கொள்ளாமல் புதிய அரசியல் வேலைத்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு மக்களை அழைக்கிறோம் . அவர் மேலும் கூறினார் .