1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நெடுந்தீவு பொலிஸ் பிரிவுக்கு உ ட்பட்ட 

நெடுந்தீவு   ஏழாம் வட்டார பகுதியில் இன்று (20) அதிகாலை  இளைஞர் ஒருவரின்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இருவருக்கிடையே காணப்பட்ட பகை காரணமாக நேற்று (19) இரவு மது போதையில்  கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை சந்தேக நபருக்கும் இடையே  வாய்தர்க்கம் இடம்பெற்றதாகவும் அதன் பின்னர் அவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இருவர் கொண்ட குழுவால் அவர்களில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அடிகாயங்களுடன் இன்று அதிகாலை  அவரது சடலம் மீட்கப்பட்டு  நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொலை செய்யப்பட்டவர் நெடுந்தீவு 7 வட்டாரத்தைச்  சேர்ந்த சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் வயது 23 என்பவராவரார்.

சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்யப்பட்டவரின் சடலம்  நெடுந்தீவு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி