இந்திய வெளிவிவகார அமைச்சர்
சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இன்று (20) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.