மாத்தறையில் மசாஜ் நிலையம்
ஒன்றின் பெண் முகாமையாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரால் சுடப்பட்டதில் பலத்த காயமடைந்து மாத்தறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (20) அதிகாலை 1 மணியளவில் மாத்தறை வல்கம சனச மலர்சாலைக்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாத்தறை - வல்கம பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் பெண் முகாமையாளரான 33 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மசாஜ் நிலைய உரிமையாளருடன் அதன் பெண் முகாமையாளர் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் பயணித்த மசாஜ் நிலைய உரிமையாளருக்கு காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.