அரநாயக்க பிரதேசத்தில் ஒட்டிப் பிறந்த
இரண்டு குழந்தைகள் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்தது. அரநாயக்க பிரதேசத்தில் ஒட்டிப் பிறந்த இரண்டு குழந்தைகள் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்தது.
அவர்களுக்கு 2 சிறுநீரகங்கள் இருப்பதாக அறியக் கிடைக்கிறது. அந்த குழந்தைகளை 4 வயதுக்கு முன்பே பிரிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சுமார் 3 வருடங்கள் ஒன்றாக இருக்கும் இந்த குழந்தைகளைப் பிரிப்பதற்கு சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு விசேட வைத்திய குழுவொன்றை குறித்த பிரதேசத்துக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த குழந்தைகளுக்கு செய்து தர வேண்டிய சுகாதார வசதிகள் மற்றும் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அறுவை சிகிச்சையை அரச தலையீட்டில் செய்து கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.