1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து

சஹன் புத்தா - 7 என்ற மீன்பிடிப் படகில் பயணித்த மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரான மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயமடைந்துள்ளதாக பேருவளை கடற்றொழில் பரிசோதகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகொன, மாகல்கந்த, பிரதேசத்தில் வசித்து வந்த சந்தன உபுல் என்ற நபரே உயிரிழந்துள்ளதாகப்பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் சுமார் 180 கடல் மைல் தொலைவில் இருந்து பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருவளை சுங்க வீதியில் வசிக்கும் சுமணசிறி பெர்னாண்டோ என்ற மீன்பிடிப்படகின் உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி