1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பதுளை -  மஹியங்கனை

பிரதான வீதியின்  மீகஹகிவுல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் அதில் பயணித்த மூன்று பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மீகஹகிவுல நகரிலிருந்து பொல்கஹராவ நோக்கிச் சென்ற இந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஏதோ தேவைக்காக முச்சக்கரவண்டியை கடை  ஒன்றுக்கு அருகில் நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிய அதேநேரம்  முச்சக்கரவண்டியும் சுமார் ஐம்பது அடிகள் நகர்ந்து சென்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது
 
மீகஹகிவுல நகரில் இன்று (20) இடம்பெற்ற  சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
மாற்றுத்திறனாளிகள் இருவரும் காயமடைந்தவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி