கட்சித் தலைவராக இருப்பதற்காகவோ
அல்லது அவரது தந்தை ஜனாதிபதியாக இருந்தார் என்பதற்காகவோ அவரிடம் நாட்டை ஒப்படைத்தால் நாடு மீண்டும் பாதாளத்துக்குச் செல்லும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எங்கும் சென்று பொருட்களை விநியோகிப்பதாக தம்பட்டம் அடிப்பவர்களால் நாட்டை ஆள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை சரியான தலைவரை நாடு தெரிவு செய்ய வேண்டும் எனவும் சரத் பொன்சேகா கூறுகிறார்.
கட்சித் தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்களில் 50 சத வீதமானோர் ஊழல்வாதிகள்் இன்னும் சிலருக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை.
நாடாளுமன்றத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாடாளுமன்றத்தில் 50 சத வீதமானோர் ஊழல்வாதிகள்.
எனவே, ஆட்சியாளரைத் தெரிவு செய்வதில் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமெனவும், இல்லாவிடில் நாட்டை மீட்க முடியாத பாதாளத்தில் விழும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.