கடற்படை பெண் உயர் அதிகாரி மற்றும்
சாதாரண சிப்பாய் ஆகியோருக்கு வட்ஸ்அப் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் வன்கொடுமைக்கு மிரட்டல் விடுத்த முன்னாள் கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் பயன்படுத்திய கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கைத்தொலைபேசிக்கு வட்ஸ்அப் தொழில்நுட்பம் ஊடாக பாலுறவு வீடியோக்களை அனுப்பி தன்னை பாலுறவு நடவடிக்கைகளுக்கு அழைப்பதாக கடற்படையின் பெண் சிப்பாய் ஒருவர் கணினி குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற கடற்படை வீரர் ஒருவர் தனது நிர்வாண வீடியோக்களை வாட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் பலருக்கு அனுப்பியதாகவும், அந்த வீடியோக்களை மற்றவர்களுக்கு அனுப்புவதாக மிரட்டுவதாகவும் உயர் பதவியில் உள்ள பெண் அதிகாரி ஒருவரும் முறைப்பாடு வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது தென் மாகாணத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு செய்துள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.