பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்தார்
என்ற குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் மகனை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் ஒன்றுக்கமைய கடந்த புதன்கிழமை (19) இரவு குறித்த சந்தேக நபரை கல்முனை மத்ரஸா வீதிக்கு அண்மையில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 80 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது
கைதான ந்தேக நபரின் தந்தை ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் நேற்று (20) கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 72 மணித்தியாலங்கள் சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்வதற்கு நீதிவான் நீதிமன்று அனுமதி வழங்கியது.
மேலும் குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களிலும் இதே குற்றத்துக்கா பல தடவைகள் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.