உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக சுமார் 500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கொழும்பு உயர்மறை மாவட்ட மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் வண. ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (20) வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“மைத்திரிபால சிறிசேன அரசியல் கண்ணோட்டத்தில் மிகவும் வங்குரோத்துக்கு ஆளானவர்.தனது வங்குரோத்து நிலையை மறைப்பதற்காகவே ஊடகங்களுக்கு முன்னால் இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் கூறப்படுகின்றன.
உண்மையில் கர்தினாலுக்குப் கிடைக்கப்பெற்ற பணத்தில் 500 மில்லியனுக்கும் அதிகமான கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் கீழ் உள்ள நிவாரண சேவை அமைப்பான செட்சரன நிறுவனம் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளது என்றார்.