ஹங்வெல்ல, அம்குகம பிரதேசத்தில்
17 வயதான பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஐந்து இளைஞர்களை கண்டுபிடிப்பதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
கூட்டு பலாத்காரத்துக்கு உள்ளான மாணவி தனது காதலனைச் சந்தித்து விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் மாணவியை பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஜல்தர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (21) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்